Wednesday, October 15, 2008

கோத்து விட்டுட்டாங்க - சினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)



எனக்கு பதிவு எழுத மேட்டர் புடிச்சு கொடுங்க அப்படின்னு நானும் எல்லோர்கிட்டயும் ஐடியா கேட்டுக்கு இருந்த நேரத்துல, நம்ம அன்பு அண்ணன், திரு மகேஷ் அவர்கள் எனக்கு இந்த கொக்கி போட்டு கூப்பிட்டார். தொடரை தொடர அழைத்ததற்கு மிக்க நன்றி.. ( சொல்ல போனா பதிவு ஒன்னு போட ஐடியா குடுத்ததற்கு )

( சரியான விடைகளை தேடாதீர்கள் , எனக்கும் பரிட்சைக்கும் ஆகவே ஆகாது..விடைகள் சரி இலலை என்றால் பொறுத்தருள்க )

இப்போ கேள்வி பதில் பகுதிக்கு செல்வோமா??





1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எனக்கு நினைவு தெரிந்த வயதில் தான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன் ( எனக்கு எந்த வயசுல நினைவு தெரிந்தது அப்படினெல்லாம் கேக்க கூடாது, சொல்லிபுட்டேன் ) ( இருந்தாலும் முயற்சி பண்ணி பார்த்ததுல அது எப்படியும் ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன் )

நினைவே தெரிந்து கண்ட முதல் சினிமா என்றால், அது வந்து, ஐயோ நியாபகம் வர மாடேங்குதே ?? ஹ் , நியாபகம் வந்துடுச்சி .. ஏதோ நம்ம விசயகாந்து படம்னு ( கரிமேடு கருவாயன் ) நினைக்குறேன்.. பாதி படத்துலே அலுத்து அடம்புடிச்சி வெளியே வந்ததா நியாபகம் ( அப்பவே பாருங்க நம்ம கேப்டன் படாத பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் )

அந்த வயசுல நான் என்னத்த உணர்றது ? ஒண்ணுமே நினைவில் இல்லை.. அதனால் கேள்வியை நான் வாபஸ் வாங்கிக்கிறேன் ..



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?



கடைசியா நான் அமர்ந்து பாத்த தமிழ் சினிமா சிவாஜி ...
பாத்துட்டு டரியல் ஆனது வேற கதை... (ஸ்ரேயா நெம்ப அழகு ) ( இங்கு நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை சொல்லி கொள்கிறேன்)



3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


நேற்று இரவு வெற்றிகரமா நாலாவது தடவையா வால் - இ படம் டி வி டியில் பார்த்தேன்..
வசனமே இல்லாமல், ஒரு அழகான காதல் கதை பார்க்கும் உணர்வு..
ரசித்து , உணர்ந்து பார்த்தது... ( என்னது இது தமிழ் சினிமா இல்லியா???) ( என்ன பண்றது தப்ப பதில் சொல்றது தானே நம்ம பழக்கம்)



4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மிகவும் தாக்கிய அப்படின்னா சந்திரமுகிய சொல்லலாம், என்ன, படம் ரிலீஸ் ஆன மொத நாளில் ( நடு இரவு ) அதி காலையில் 3 மணிக்கு டிக்கெட் வாங்க போய் போலீஸ் மாமாக்கள் தாக்கியது நினைவில் உள்ளது..

சீரியஸா சொல்லனுமா , காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் சீன் மிகவும் தாக்கியது ( பிடிச்சி இருந்ததுன்னும் சொல்லலாம்) அது ஏனோ தெரியல அப்போ நான் விடலை பருவத்தில் இருந்ததனால் கூட இருக்கலாம்..( நம்புங்க நான் சின்ன பையன் தான்)
அப்புறம் மனதை பாதித்த மற்றுமொரு சினிமா சேது . படம் முடிந்து நான் வெளியில் வரும்போது மனதில் மிகப்பெரிய வலி..


5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?



பாபா படத்திற்கு பாம .க வினர் செய்த அட்டூழியங்கள்.. நான் அப்பொழுது சிதம்பரத்தில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன். அங்கு அவர்கள் செய்த அராஜகங்கள் , படத்தை ஓட விடாமல் செய்தது.. அப்பப்பா இன்னும் நினைவில் இருக்கிறது. ( நான் அதிகமாக பார்த்த படங்களில் பாபாவும் ஒன்று ), சிதம்பரத்தில் மட்டும் 48 தடவை பார்த்தேன். இதில் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரையும் கைகாசில் கூட்டி கொண்டு போய் பார்த்தது ஒரு சாதனை ..( இருந்தும் படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்)



5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

முதன்முதலில் டி டி எஸ் பற்றி கேள்விபட்டதும் , பிறகு அதை திரை அரங்கினில் பார்த்து உணர்ந்ததும் தான் என்னுடைய தமிழ் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதம்,ஆனந்த விகடன் , சினி பிட்ஸ், வண்ணத்திரை போன்ற சமூக அக்கறையுள்ள புத்தகங்கள் படிப்பேன்.. அதில் வரும் அனைத்து சினிமா பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து வைத்துக்கொண்டு நண்பர்களிடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் சொல்லி கொண்டு திரிவேன்.. இப்போ அதெல்லாம் இல்லை..


7.தமிழ்ச்சினிமா இசை?


ஆல் டைம் பேவரைட் இசைஞானி.. பிறகு ஏ.ஆர் . ரகுமான் மெலோடிக்கள் பிடிக்கும்..

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?



வேறு இந்திய மொழி படங்கள் என்றால், ஹிந்தி படங்கள் பார்ப்பேன்.
உலக மொழி படங்கள என்றால் ரஷ்ய மற்றும் கொரியன் படங்களின் டி வி டிக்கள் இங்கு நிறைய கிடைக்கும்.. அப்போ அப்போ நேரம் கிடைக்கும் பொது பார்ப்பேன்.
அதிகம் தாக்கியது என்றால், BLOOD IN DIAMOND, schindler's list , THE TERMINAL, CAST AWAY, இப்படி சொல்லிகிட்டே போகலாம்..





9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்ப்பும் இல்லை.. அதனால் அடுத்த
கேள்விக்கு தாவுகிறேன்..

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு நம்ம எதிர்காலமே ஒன்னும் தெரியில இதுல இது வேறயா??



11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்னை நீங்கள் கீழ்ப்பாகம் மருத்துவமனையில் பார்க்கலாம்.. அது தான் நடக்கும்..

ஏதோ என்னையும் மதித்து அழைத்த திரு மகேஷ் அவர்களுக்கு நன்றிகள்..
என்னால் முடிந்தவரை எனக்கு மனதில் தோன்றியவற்றை மட்டுமே இங்கு பதிந்துள்ளேன்.

இதுவும் தொடரோட்டம் போல தான். அதனால் நான் அழைக்கும் சிலர்..
( ஏதோ கூப்பிடனும்ன்னு எல்லாம் கூப்புடுல, அதனால ஒழுங்கா இந்த கொக்கிய கன்டினியு பண்ணுங்க, பண்ணல வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்)

நான் அழைப்பது இவர்களை தான்.. ( நாங்க எல்லோரும் ஒரு கூட்டணி , புதிதாக வலை பதிய ஆரம்பித்தவர்கள் ) ( கயல்விழி, விஷ்ணு இதில் சேர்த்தி இலலை. அவங்க எல்லாம் பெரிய ஆளுங்க )


1. அன்பு பதிவர் , சேலத்து சிங்கம் மோகன்
2. அன்பு தம்பி, சுபாஷ் ( எவ்ளோ நேரந்தான் நானும் மாட்டுறது, அதனால இப்போ உன் ட்டர்ன்)
3. அருமை கவிஞர் விஷ்ணு
4. எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கிய கயல்விழி அவர்கள்
5. காஞ்சி தலைவர் இளைய பல்லவன்

எல்லோரும் மறக்காம பதிவ போட்டுடுங்க அப்படின்னு சொல்லிட்டு இந்த பதிவமுடித்து கொள்கிறேன்..

நன்றி வணக்கம்..

235 comments:

  1. 201: போட்டு தாக்குங்க

    ReplyDelete
  2. pathivu

    200 அடிச்ச களைப்பு, நான் தூங்க போறேன்.///


    தூங்காதே தம்பி தூங்காதே

    ReplyDelete
  3. குடுகுடுப்பை

    201: போட்டு தாக்குங்க///

    தாக்கிட்டா போச்சு

    ReplyDelete
  4. http://maniyinpakkam.blogspot.com/2008/10/blog-post_272.html

    ReplyDelete
  5. பொட்டி நெறஞ்சி வழியுது....சீக்கிரம், வேற எதனா பதிவு ஒன்னு போடுறது?

    ReplyDelete
  6. Nigeria to Tanzania?

    ReplyDelete
  7. Always roamin Africa........

    ReplyDelete
  8. பழமைபேசி

    பொட்டி நெறஞ்சி வழியுது....சீக்கிரம், வேற எதனா பதிவு ஒன்னு போடுறது?//////

    உங்கள மாதிரி எனக்கு பதிவு போட வராது அண்ணே.. நான் எல்லாம் ரொம்ப சின்ன பையன்..

    போடுவோம்... போட்டுடுவோம்

    ReplyDelete
  9. தளம் ரொம்ப புதுசா, அழகா இருக்கு..!! :)) Belated Diwali wishes..!! :))அப்ரைசல் என்ன ஆச்சு?? :))

    ReplyDelete
  10. நீங்க திருச்சியா?? :)))

    ReplyDelete
  11. Thanks for ur Wishes...
    Thnks fr ur compliments

    ReplyDelete
  12. ஸ்ரீமதி

    நீங்க திருச்சியா?? :)))////


    ஆமாங்க..
    நான் திருச்சி தான்..
    நீங்க ????

    ReplyDelete
  13. ஸ்ரீமதி

    தளம் ரொம்ப புதுசா, அழகா இருக்கு..!! :)) Belated Diwali wishes..!! :))அப்ரைசல் என்ன ஆச்சு?? :))////


    அப்பரைசல் நல்ல படியா முடிஞ்சது ..

    நன்றி

    ReplyDelete
  14. ஆமாம் எப்படி உங்களை கடத்திட்டு போனவங்க அதுக்குள்ள விட்டுடாங்கனு சொல்லவேயேல்லை...?

    ReplyDelete
  15. கூடுதுறை

    ஆமாம் எப்படி உங்களை கடத்திட்டு போனவங்க அதுக்குள்ள விட்டுடாங்கனு சொல்லவேயேல்லை...?///


    அது தான் யாரோ, கூடுதுறை அப்படின்னு ஒருத்தர் இருக்காராம், அவுரு தான் அடுத்த டார்கெட் அதனால உனிக்கி விடுதலைன்னு சொல்லி தொரத்தி விட்டுடாங்கோ

    ReplyDelete
  16. //அது தான் யாரோ, கூடுதுறை அப்படின்னு ஒருத்தர் இருக்காராம், அவுரு தான் அடுத்த டார்கெட் அதனால உனிக்கி விடுதலைன்னு சொல்லி தொரத்தி விட்டுடாங்கோ//

    ச்ச்சே..பணத்தை வாங்கிகொண்டு ஏமாத்திட்டாங்க....

    ReplyDelete
  17. கூடுதுறை

    ச்ச்சே..பணத்தை வாங்கிகொண்டு ஏமாத்திட்டாங்க....////


    ஒ.. அப்போ பணம் குடுத்தது நீங்க தானா?? அதுக்கு தான் அவங்க உங்கள பச்சை, சிவப்பு , நீலம் நீலமா கலர் கலரா திட்டுனாங்களா.. அது உங்கள தானா??

    ReplyDelete
  18. //பிளாகர் உருப்புடாதது_அணிமா கூறியது... கூடுதுறை
    ச்ச்சே..பணத்தை வாங்கிகொண்டு ஏமாத்திட்டாங்க....////
    ஒ.. அப்போ பணம் குடுத்தது நீங்க தானா?? அதுக்கு தான் அவங்க உங்கள பச்சை, சிவப்பு , நீலம் நீலமா கலர் கலரா திட்டுனாங்களா.. அது உங்கள தானா??//

    ஓ...இப்பதானே தெரியுது ரகசியம் அதிகமாகொடுத்து விலைக்கு வாங்கிட்டிங்க அவங்கள....

    ReplyDelete
  19. ////கூடுதுறை


    ஓ...இப்பதானே தெரியுது ரகசியம் அதிகமாகொடுத்து விலைக்கு வாங்கிட்டிங்க அவங்கள..../////

    நாங்க எல்லாம் MPக்கு பணம் குடுத்து எங்க பக்கம் வலைக்குற ஆளுங்க.. இது எல்லாம் ஜுஜூபி மேட்டர்..

    ReplyDelete
  20. சரி.சரி...

    பொழச்சு போங்க....

    சீக்கிரம் அடுத்த பதிவு போடவில்லையெனில்...விரைவில் அடுத்த குருப் வரும். ஜாக்கிரதை...

    ReplyDelete
  21. ///கூடுதுறை

    சரி.சரி...

    பொழச்சு போங்க....

    சீக்கிரம் அடுத்த பதிவு போடவில்லையெனில்...விரைவில் அடுத்த குருப் வரும். ஜாக்கிரதை...////


    சரி சரி மன்னிச்சுடுங்க..
    இப்போ தான் நம்ம தம்பி ஒரு தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்..
    அதையே காரணமா வெய்ச்சு ஒரு பதிவு போட்டுடுவோம்ல??

    ReplyDelete
  22. //நாங்க எல்லாம் MPக்கு பணம் குடுத்து எங்க பக்கம் வலைக்குற ஆளுங்க.. இது எல்லாம் ஜுஜூபி மேட்டர்..//

    வந்ததுல இருந்து நாங்க நாங்கன்னு சொல்லுறீங்களே? நீங்க எத்தனை பேரு?

    ReplyDelete
  23. ///pathivu


    வந்ததுல இருந்து நாங்க நாங்கன்னு சொல்லுறீங்களே? நீங்க எத்தனை பேரு?///

    வாப்பா, இந்த கேள்வி கேக்க தான் ஓடி வந்தியா ராசா??
    நல்லா இரு..

    ReplyDelete
  24. நானும் திருச்சி தான்.. திருச்சில எங்க?? இதுல சொல்ல முடியலன்னா.. என்னோட பழைய பதிவு எதுலயாவது பின்னுட்டமிடுங்க.. Comments moderation is there.. :))

    ReplyDelete
  25. Sorry dont know ur mail id.. :))

    ReplyDelete
  26. உங்களின் "பரிணாம வளர்ச்சிக்குப்பின் நான்" என்ற பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளேன் ...
    அதில் எனது மின்னஞ்சல் முகவரி உள்ளது ..

    ReplyDelete
  27. அண்ணே அணிமா, உங்களையும் முனிமாவயும் காணோம்

    ReplyDelete
  28. தயவு செஞ்சி உங்க காலை அப்படியே கொஞ்சம் கணிப்பொறி திரைக்கு நேரா வெச்சீங்கன்னா நான் தொட்டு கும்பிட்டுக்குவேன் !!!! பாபா படத்தை 48 முறை எப்படிங்க பாத்தீங்க ???? தெய்வம் நீங்க !!!!!

    ReplyDelete
  29. ///குடுகுடுப்பை

    அண்ணே அணிமா, உங்களையும் முனிமாவயும் காணோம்/////

    முனிமா, என்னை கோச்சிக்கிட்டு உங்க வூட்டுக்கு வந்துடுச்சி

    ReplyDelete
  30. ///selwilki

    தயவு செஞ்சி உங்க காலை அப்படியே கொஞ்சம் கணிப்பொறி திரைக்கு நேரா வெச்சீங்கன்னா நான் தொட்டு கும்பிட்டுக்குவேன் !!!! பாபா படத்தை 48 முறை எப்படிங்க பாத்தீங்க ???? தெய்வம் நீங்க !!!!!///

    ( இதை நீங்கள் நகைச்சுவைக்காக சொன்னீர்கள் என்றால் நன்று )


    பலருக்கு பிடிப்பது தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைப்பது தவறு...
    எனக்கு பிடித்து உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்..
    அதற்க்காக இந்த மாதிரி சொல்வது கொஞ்சம் அதிமீறின பின்னூட்டமாக தான் என்னால் பார்க்க முடிகின்றது ..மன்னித்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  31. அண்ணே புது பதிவ தட்டுங்க

    ReplyDelete
  32. பல இடங்களில் பார்த்த தொடர் பதிவுதான் எனினும், படங்களுடன் பார்க்கும்படி ,படிக்கும்படி இருந்தது.
    தள வடிவமைப்பு நன்றாக உள்ளது.

    ReplyDelete
  33. குடுகுடுப்பை

    அண்ணே புது பதிவ தட்டுங்க///

    தட்டுவோம் தட்டுவோம்

    ReplyDelete
  34. தமிழ்ப்பறவை

    பல இடங்களில் பார்த்த தொடர் பதிவுதான் எனினும், படங்களுடன் பார்க்கும்படி ,படிக்கும்படி இருந்தது.
    தள வடிவமைப்பு நன்றாக உள்ளது.///////


    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...