பட பட பட்டாம் பூச்சி விருது ..
நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் அப்படின்னு எத்தனை தபா கூவுனாலும் யாருமே எங்கள ( சரி சரி என்னை இப்போ நிம்மதியா ??) திரும்பி பாக்காததுனால, நான் ரவுடி இல்லியோ அப்படின்னு சந்தேகம் ரொம்ப நாளாவே இருந்தது.. ( என்னாது எங்க இருந்துதா?? எங்கேயா?? , எங்க வீட்டு பரண் மேல இருந்தது )) அப்புறமா நானும் போலீஸ் ஸ்டேஷன் போயி என்னையும் ரவுடி தான்னு இந்த உலகத்துக்கு சொன்னா மாதிரி தான் இப்போ இங்கே நீங்க பார்த்துகிட்டு இருக்குற விருதும்..
( எப்படி? எவ்ளோ சீக்கிரமா மேட்டர்க்கு வந்துட்டேன் பார்த்தீங்களா?? )
ஆனா பாருங்க இந்த விருத குடுத்தவங்க ராகவன் அண்ணாச்சி பெரிய ஆளா இருக்கார் . ஆனா அத வாங்குற தகுதி நமக்கு ( சரி சரி ) எனக்கு இருக்குதானா , அது சந்தேகம் தான்..
இருந்தாலும் படிக்காமலே , அரசியல்வாதி அப்படிங்கிற தகுதிய மட்டும் வைச்சிக்கிட்டு டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு இது எவ்வளவோ மேல் அப்படின்னு மனச தேத்திகிட்டு நானும் இந்த விருத ஆனந்த கண்ணீரோடு வாங்க்கிறேன் .. ( கைதட்டல் ஓசை )
அப்புறம் இருந்தாலும் இந்த ராகவன் அண்ணாச்சிக்கு இருக்குற குறும்போட அளவு தாங்கலப்பா.. For The Coolest Blog I Ever Know இது பார்த்து நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது.. Coolest Blog?? ஆமா இது எந்த பிரிவுல என்னோட Blog அடங்குது அப்படின்னு யாராச்சும் ( அட்லீஸ்ட் ராகவன் அண்ணனாவது சொல்லுங்க ) .. எப்படி இப்படி எல்லாம் அபாண்டமா பொய் சொல்லி , இப்படி எனக்கு விருத குடுத்தீங்க.. ( விருது குடுத்ததால் முன்பே வாக்களித்தபடி ஹி ஹி கண்டிப்பா உங்களுக்கு விஸ்கி வாங்கி தருவேன் .. )
அப்புறம் இந்த விருத வாங்கணும்னா சில விதிமுறைகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தால், அந்த விதிமுறைகளை மீறுவேன் என்பதை இங்கு சொல்லி கொள்ள ஆசைபடுக்கிறேன்.. ( சும்மா தமாசு தமாசு ...)
விதி முறைகள் (பழையது ) : ( சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு )
1. Put the logo on your blog.
2. Add a link to the person who awarded you.
3. Nominate at least 7 other blogs.
4. Add links to those blogs on yours.
5. Leave a message for your nominees on their blogs.
இது தான் மூல ( வெளி மூலமா உள் மூலமா ? அப்படின்னு யாருப்பா அங்க கேக்குறது ?? ) விதிமுறைகள் என்று என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில் அறிந்தேன்..
இருந்தாலும் நம்ம ஆளுங்க பாருங்க, எங்க போயி பத்து பேர தேடுறதுன்னு நம்ம சவுரியதிற்க்கு ஏற்றார் போல மூணு பேருன்னு திருத்தி விட்டார்கள்..
அவங்களுக்கு பல நூறு கோடி நன்றிகள்.. இல்லாட்டி நான் மட்டும் எங்க போய் அவங்கள அத்தன பேர புடிக்கிறது ..
சரி இப்போ விதி முறைகள் படி, இந்த விருதுகள் எப்படி , யார் யாருக்கு, யார் யார் குடுத்து அப்படின்னு பார்ப்போம்.. இதுக்கு நம்ப ராகவன் அண்ணன் லிஸ்ட் குடுத்துள்ளார்.. அதே போல என் பங்குக்கு நானும் ..
அணிமா <----
ராகவன் <----
ரம்யா <----
பூர்ணிமா <----
விஜய் <-----
திவ்ய பிரியா <------
G3(பிரவாகம் )--->
கார்த்தி/mgnithi--->
Gils/Shanki---->
பிரியா -->
Kartz---->
Tusharmargal--->
Akansha---->
Infinity---->
Simple Elegant Girl ---- >
Chronic Chick Talk ----->
Empty Streets----->
The Blog Reviewer--->
biotecK---->
KisAhberuang---->
blogscope >>>>>> (இவரு தான் ஆரம்பிச்சு வைச்சாரா?? தெரியில..)
(இதுக்கு மேல கண்டு பிடிக்க என்னனால முடியாதுடா சாமி)
ஐயா புண்ணியவான்களே , இவங்க தான் இந்த அவார்ட் விளையாட்ட தொடர்ந்து வெற்றி கரமா நடத்தி , அந்த விருதும் என்னை இன்னிக்கு வந்து சேர்ந்ததுக்கு எல்லா காரணங்களும் மற்றும் எனது நன்றிகளும் இவிங்கள தான் சேரும் ...
இவ்ளோ நல்லவங்க நடுவால இருந்திருக்காங்கன்னு நினைக்கும் போது ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(அவ்வளவு நல்லவங்களா இவிங்க..??.)
சரி இப்போ ஒரிஜினல் மேட்டர் க்கு வருவோம்.. புது விதிமுறைகளின் படி, இதோ நான் அழைக்கும் (பழக்க தோஷம் ) குடுக்க போகும் மூன்று பதிவர்கள்..( யார் பேராச்சும் விட்டு போச்சு, என் பேர் இந்த விருது லிஸ்ட்ல இல்ல அப்படின்னு என்கிட்டே சண்டைக்கு வராதீங்க.. இப்பவே சொல்லி ப்புட்டேன்.. )
1. மோகன் - என்ன தம்பி என்ன ஆச்சு?? ரொம்ப நாலா என் கடைபக்கமும் காணும்??
2. கூடுதுறை - அண்ணே, கடைசியா நீங்க போட்ட பதிவு உங்களுக்காவது நியாபகம் இருக்கா??
3. நசரேயன் - நம்மள விட இவரு கொஞ்சம் கலர் குறைவு தான் என்ற பெருமை இவருக்கு எப்பவுமே உண்டு .. ( நீங்க எழுதிய கதைக்கு தான் இந்த விருது ) மேலும் 700 பின்னூட்டங்கள் (அதற்க்கு மேலும் ) பெற்றவர்..
இப்போ உங்களுக்கான விதிமுறைகள் :
*இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போட்டுடனும். *உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த இந்த நல்லவரை மறந்திடக்கூடாது. *நீங்களும் என்னை மாதிரியே நல்ல மனதோட யாருக்காவது பங்கை சரியா கொடுத்திரனும். ( நன்றி பூர்ணிமா )
பின்குறிப்பு :
டிஸ்கி : என்னது தலைப்புக்கும் உள்ளே இருக்குற மேட்டர் க்கும் சம்பந்தம் இல்லியா?? அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?? எப்படியோ இந்த வருடத்தின் என்னுடைய கடைசி பதிவ எழுத வைத்த அண்ணன் ராகவனுக்கு மிக்க கோடானு கோடி நன்றிகள் ( இது போதுமா அண்ணே )
அப்புறம் முக்கியமா எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..